states

img

இமாச்சலில் மேகவெடிப்பு: ஒருவர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மெளர் மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

இமாச்சலம்,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பல இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

இந்நிலையில், சிர்மெளர் மாவட்டத்தில் உள்ள பர்லோனி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார்.

கனமழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் சாலைகள் மூடப்பட்டு வருகின்றது. இதுவரை மொத்தம் 71 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யமுனா ஆற்றில் தண்ணீர் அதிகரித்துள்ள நிலையில், சில சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. கனமழை காரணமாக போன்டா சாஹிப் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இன்று தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கையும் மற்ற மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 12 மாவட்டங்களில் 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.